Exam

புதன், 21 அக்டோபர், 2009

பேராசிரியர் மு.இளங்கோவன்

தமிழே தன் மூச்சு என்று தனது தமிழ் பணியினை செம்மனே செய்யும் எனது நண்பரும், புதுச்சேரி பலகலைக்கழகத்தில் பேராசிரியராய் பணிபுரிபவருமாகிய முனைவர் திரு. மு.இளங்கோவன் அவர்களுக்கு செம்மொழி இளம் அறிஞர் விருதினை இந்திய அரசின் செம்மொழி நிறுவனம் விருதுகளை அறிவித்திருப்பதை இட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். பொருத்தமான நேரத்தில் பொருத்தப்பாடுடைய ஒருவருக்கு வழங்குவதால் அவ்விருது பெருமையடைகின்றது.

வெள்ளத்தால் அவரது புதுச்சேரி வீடு தண்ணீரில் நிரம்பியிருந்த போதும் தன்னால் சேர்க்கப்பட்ட அரிய நூல்கள் தண்ணீரில் வீனாகி விட்டதே என்று கலங்கியவர் அப்பெருந்தகை. நாம் எல்லோரும் பெரும்பாலும் பிரிசித்திப்பெற்ற பெருந்தலைவர்களைப் பற்றியே எழுதுவோம். ஆனால் அவரோ குக்கிராமங்களில் இருந்து தமிழ்ப்பணி செய்து வரும் தமிழ்ப்பெருந்தகைகளை எமக்கு தனது வலைப்பூவின் வாயிலாக எடுத்தியம்பியவர்.

இவரது நூல்கள்

இவரது வலைப்பூவினை கட்டு மகிழுங்கள்