Exam

வெள்ளி, 30 மே, 2008

ஈழம் இந்தியாவை வென்றது

ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்குக் கரையில் செம்லை என்ற ஊரில் பிறந்த இரகுநாதன் கவியழகன் என்ற எமது தமிழ்ந் சகோதரர் ஒருவர் இந்தியாவின் மத்திய கல்வி நிறுவனத்தினால் (சி.பி.எஸ்.ஈ) பரீட்சையில் மொத்தம் 500 க்கு 464 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

திருச்சி மகாத்தமா காந்தி மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்றுவரும் இம்மாணவன் கல்வியில் மட்டுமன்று, ஓவியம், மிருதங்கம் போன்ற நுண்கலைகளிலும் கோ-கோ, கிறிகட், பற்மிண்டன் (பூப்பந்து), மற்றும் தடகள விளையாட்டுக்களிலும் சிறந்த வீரனாக விளங்கி வருகிறார்.

எட்டாவது வயதில் தமிழ்நாடு ரீதியில் மணவர்கள் மத்தியில் நடைபெற்ற காரத்தே போட்டிகளில் பங்குபற்றி முதன்மைப் பதக்கங்கள் பெற்றுள்ளார். அகில இந்திய கராத்தே களகம் இவருக்கு யுவகலாபாரதிபட்டம் வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது. ஓவியத்துறையில் இவருடைய ஈடுபாடும் ஊக்கமும் ஒன்பது வயதிலேயே இவரை கலைமாமணி என்ற கௌரவப் பட்டத்திற்கு சொந்தக்காரனாக்கியது.

இவ்வளவு சிறப்புக்களைக் கொண்டிருக்கும் எம்மவர் சிறுவயது முதல் கல்வி கற்பதில் பல்வேறு இடையூறுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஆயினும் இவரிடம் காணப்பட்ட சிறப்புத்தன்மைகள் காரணமாக இவரை இவர் கல்வி கற்ற மகாத்துமா காந்தி நூற்றண்டுக் கல்விக்கூடம் விசேட பயிற்சிகளில் ஈடுபடுத்தியது. அதனால் பங்கு பெறுகின்ற எந்தவொரு நிகழ்விலும் இவர் சாதனைகளைத் தனதாக்கிக்கிக் கொள்வதுடன் தான் கல்விகற்ற பாடசாலைக்கும் புகழ் சேர்ப்பதால் பள்ளி வட்டாரத்திலும் முதன்மை மாணவராகத் திகழ்கின்றார். திருச்சிராப்பள்ளி மாநிலத்திற்கும் இவரால் பெருமைகள் கிடைத்துள்ளதோடுமட்டுமின்றி இவரால் நாமும் பெருமையடைகின்றோம்.

இவருடன் இவரைப்பற்றி எமது வவுனியா தமிழ் வலைத்தளத்தில் எழுதுவதையிட்டு நானும் பெரும் உவகை அடைகின்றேன்.

2 கருத்துகள்:

திருச்சிராப்பள்ளி தமிழச்சி சொன்னது…

கற்றவர்களால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியுமா?
படித்தவர்களால், கற்றவர்களால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியுமா?



எண்ணாமல் எவரொருவரும் எப்பொருளையும், எச்செயலையும் ஆராயவோ, விளங்கிக்கொள்ளவோ, விளக்கவோ முடியாது. எண்ணங்களே அனைத்து அறிவியல்களுக்கும், இலக்கியங்களுக்கும், குழப்பங்களுக்கும், போரட்டங்களுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் அடிப்படையாகும். ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை என்பதில் பல கற்று, பல பட்டங்களையும், விருதுகளையும் அள்ளிச்சென்ற மாமேதைகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும், மெய்ஞானிகளுக்கும் தெளிவில்லை. தெளிவில்லாத விஷயங்களை மக்களுக்குத் தெளிவுபடுத்துவது கற்றறிந்த அறிஞர்களின் கடமையாகும்.


ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை? இக்கேள்வியில் மனித அறிவின் சூட்சுமம் பொதிந்துள்ளது. படித்தவர்களால், கற்றவர்களால் மட்டுமே ஒன்றைப் பற்றி எண்ணமுடியும் என்ற மூடநம்பிக்கையை இன்றைய கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள். படித்தவர்களால், கற்றவர்களால் மட்டுமே ஒன்றைப் பற்றி எண்ணமுடியும், சிந்திக்க முடியும் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது.


கல்வித்தகுதி என்பதின் அடிுப்படையில் சமுதாயத்தில் ஒருவருக்கு வழங்கப்படும் அனைத்து முன்னுரிமைகளும் சமூகக் குற்றமாகும். படித்தாவனால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியும் என்பதற்கு உள்ள ஆதாரங்கள் என்ன?


படிக்கத்தெரிந்தவர்களும், படிப்பறிவற்றவர்களும், கற்றவர்களும் ஒன்றைப்பற்றி எண்ணுவதென்ன என்பதை http://www.tamil.host.sk/ , http://tamil.isgreat.org போன்ற இணையத்தளங்கள் ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகள் எவையென்பதை அழகான தமிழில் சித்தரிக்கின்றன.


எனவே, ஒன்றைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை அல்லது உன்னைப் பற்றி எண்ணப்படக்கூடியவைகளை நிர்ணயிப்பவைகள் எவை என்ற தலைப்பில் தாங்களறிந்த அறிஞர்களைக் கொண்டு ஒரு விவாத்தைத் தொடங்கினால் பல பயனுள்ள, மக்கள் மனதைக் கவரும் சூடான, சுவையான பல தகவல்களும், கருத்துக்களும் மக்களிடமிருந்து வெளியாகும். படித்தவர்களால், கற்றவர்களால் மட்டும் தான் ஒன்றைப் பற்றிச் சிந்திக்கமுடியுமா?



- திருச்சிராப்பள்ளி ஷாம்ளின் ஜோஸஃபின்

பெயரில்லா சொன்னது…

I am nethaji, I read the whole passage, It is fine forever. This my blogger link
http://nethajies.blogspot.com