Exam

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

இலங்கை பதிவர் சந்திப்பு

இந்திய வலைப்பதிவர்களின் பதிவுகளில் சென்னையில் வலைப்பதிவர் சந்திப்பு, கோவையில், சேலத்தில் என்று பதிவுகள் வரும் போதெல்லாம் என்னுள் ஓர் ஏக்கப் பெருமூச்சு எழும். ஏன் இலங்கையில் ஓர் இலங்கை பதிவர்களுக்கான சந்திப்பை நாம் நடாத்தவில்லை என்று.காலச்சூழல் பொருளாதார நிலை இரண்டின் தாக்கங்களால் என்னால் அவற்றை மனதில் மட்டுமே நினைத்துப் பார்க்க முடிந்தது. இந்நிலையில் பதிவர் திரு.வந்தியதேவன் அவர்களிடம் இருந்து ஓர் மின்னஞ்சல் இலங்கையில் பதிவர் சந்திப்பு என்று. என்னுள் உற்சாகம் பீறிட்டுள்ளது. வரும் 23ஆம் திகதியாம் கொழும்பில் நிட்சயம் கலந்து கொள்ள வேண்டும்.

இப்பதிவின் மூலம் எனது மாணவர்களும் எனது ஏனைய நண்பர்களும் இச்சந்திப்பில் கலந்து சிறப்பிக்க வேண்டும் என அன்புடன் அழைக்கின்றேன்.


காலம் : 23.08.2009 ஞாயிற்றுக்கிழமை .
நேரம் : காலை 9 மணி.
இடம் : கொழும்பு தமிழ்ச் சங்க வினோதன் மண்டபம்,
இல.7, 57வது ஒழுங்கை (ருத்ரா மாவத்தையின் பின்புறம்), கொழும்பு 06.


நோக்கங்கள் :
இலங்கைத் தமிழ் வலைப்பதிவாளர்களிடம் அறிமுகத்தையும் தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்ளுதல்.

புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குதல்

இலங்கைப் பதிவாளர்களின் திறமைகளை இணையத்தைவிட்டு வெளிக்கொணர முயற்சி செயதல்.

பதிவாளர்களிடையேயான கருத்துரைகள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுதல்.

பதிவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் அல்லது தொழில்நுட்ப சந்தேகங்களுக்கான வழிமுறைகளை ஆராய்தல்

இன்னும் பல‌..

வலைப்பதிவாளர்கள், புதிதாக வலைப்பதிபவர்கள், வலையுலக வாசகர்கள், பின்னூட்டமிடுபவர்கள் என அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

மேலதிக விளக்கங்களுக்கும் தகவல்களுக்கும் பின்வருவோரைத் தொடர்பு கொள்ளவும்.


லோஷன் : arvloshan@gmail.com
புல்லட் : bullettheblogger@gmail.com
வந்தி : vanthidevan@gmail.com
ஆதிரை : caskaran@gmail.com

முழுமையான நிகழ்ச்சி நிரல் அடுத்த வாரம் பிரசுரிக்கப்படும்.

இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.


பிற்குறிப்பு : மின்னஞ்சலினூடாக பலரை நாம் தொடர்புகொண்டோம் சிலரின் மின்னஞ்சல் முகவரிகள் எமக்கு கிடைக்கவில்லை ஆகவே தயவு செய்து மின்னஞ்சலில் இதனைப் பற்றிய தகவல்கள் கிடைக்காதவர்கள் எந்தவித தயக்கமின்றி எம்மைத் தொடர்பு கொள்ளவும்.

ஏதாவது கருத்துக்கள்,ஆட்சேபணைகள்,ஆலோசனைகள் இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.

உங்களுக்கு தெரிந்த வலைப்பதிவாளர்கள், ஆர்வமுள்ளவர்களையும் அழைக்கவும்; உங்கள் வருகை பற்றி உறுதிப் படுத்தவும்.

யாரையும் தவறவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாயுள்ளோம்.. யாராவது ஆரம்பிக்க வேண்டும் என்பதால் தான் நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.. எம்முடன் இணைந்து முன்னெடுக்க ஆர்வமுள்ளோர் வரவேற்கப்படுகிறார்கள்.

இருவாரங்கள் தாராளமாக இருப்பதால் இலங்கை முழுவதும் இருந்து பங்கேற்பை எதிர்பார்க்கிறோம்.

உங்கள் வலைத்தளங்களிலும் இதனைப் பிரசுரித்து வருகைகளை அதிகரிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

3 கருத்துகள்:

ilangan சொன்னது…

தங்களின் வருகையை மிகவும் எதிர் பார்த்திருந்தேன். தமிழிஸ் முலமாக உங்களை அறியக்கிடைத்தது.

ilangan சொன்னது…

தங்களின் வருகையை மிகவும் எதிர் பார்த்திருந்தேன். தமிழிஸ் முலமாக உங்களை அறியக்கிடைத்தது.

S.Lankeswaran சொன்னது…

என்ன செய்வது தவிர்க்க இயலாத காரணத்தால் வர இயலவில்லை. மிகவும் கவலையாக அடைந்தேன். எனது மாணவர் சபா கலந்து கொண்டார்.