Exam

திங்கள், 10 நவம்பர், 2008

பாதையில் நடந்து செல்வோருக்கும் அனுமதி அட்டை

இன்றைக்கு நான் ரொம்பநாளாக எழுத நினைத்த கருத்தினை எழுத உள்ளேன். உலகம் முழுவதும் பார்த்தீர்களேயானால் வாகனம் ஓட்டுபவர்கள் அனுமதி அட்டை (லைசென்ஸ்) எடுக்க வேண்டும். ஏன் விமானம் ஓட்டுபவர்கள் கூட விமான அதற்கான அனுமதி அட்டை வைத்திருக்க வேண்டும். ஆனால் நாம் யாரும் இந்தப் பாதையில் நடந்து செல்பவர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவர்களும் வாகனங்களைப்பற்றியோ விதிமுறைகளைப் பற்றியோ கவலைப்படுவதில்லை (மற்ற நாடுகளைப் பற்றி எனக்குத் தெரியாது எம் நாட்டைப்பற்றி மட்டுமே எனது வவுனியாவின் நிலையைப்பற்றி மட்டுமே நான் இங்கு குறிப்பிடுகின்றேன்).

இங்கு ஆடு மாடுகள் கூட சற்று வரும் வாகனங்களைப் பார்த்து சற்று நின்று தான் செல்கின்றன. ஆனால் பாதசாரிகள் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. மஞ்சள் கோடுகள் எதற்கு வரைந்துள்ளார்கள் என்பதைப்பற்றியும் சிந்தனையில்லை. இன்று வவுனியா பிரதேசத்தில் அதிகமான விபத்துக்கள் இந்தப் பாதசாரிகளின் கவனக்குறைவாளும் விதிமுறைகளை மீறுவதாலும் தான் நடைபெறுகின்றது.

இதை தவிர்க்க முதலில் பாதசாரிகளுக்கு சாலை விதிமுறைகளைப்பற்றி வகுப்புகள் எடுக்கப்பட்டு விழிப்புணர்ச்சி ஊட்டப்பட்டு தேர்வு வைத்து அனுமதி அட்டை வளங்கப்பட வேண்டும். அனுமதி அட்டை உள்ளவர்கள் மட்டுமே தெருக்களில் நடமாட முடியும். மற்றவர்கள் கழுத்தில் ஓர் L board ஐ மாட்டிக் கொண்டு திரிய வேண்டும். அனுமதி பெற்றவர்கள் சரியாக விதிமுறைகளைப் பின்பற்றாவிற்றால் அவர்களின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட வேண்டும்.

வீதியில் ஓர் விபத்து நடந்தால் பாய்ந்தடித்து ஓடி வரும் போக்குவரத்து பொலீசாரே, இவற்றை சற்று கருத்தில் எடுத்துக் கொள்ளுங்களேன். வீதி விபத்தை தடுப்பீர்.

(இன்று காலையில் கணவன் மற்றும் நிறைமாத கர்ப்பினிப் பெண் ஆகியோர் பயனித்த உந்துருளியொன்றின் குறுக்கே ஓடிய ஓர் இளம் பெண்ணினால் விபத்து ஏற்பட்டு அந்த நிறைமாத கர்ப்பினிப் பெண் துடித்த துடிப்பினை பார்த்து, மனவேதனையில் இந்தப் பதிவினை நான் எழுதினே்)

கால் நடையாக செல்வோரே நீங்கள் கால் நடையாகத்தான் செல்கின்றீர்கள், ஆனால் நீங்கள் “கால்நடை” இல்லையே???????? மனிதர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

கருத்துகள் இல்லை: