Exam

வியாழன், 9 அக்டோபர், 2008

வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் வாணிவிழா-2008

மூவின மக்களும் தொழிற்கல்வி பயிலும், வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் 08-10-2008 அன்று வாணிவிழா நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்வினை மாவட்ட இளைஞர் பயிற்சி நிலையத்தினர் ஒழுங்கு செய்திருந்தனர்.
இந்நிகழ்வினை தகவல் தொழில்நுட்ப விரிவுரையாளர் திரு.ச.இலங்கேஸ்வரன் அவர்கள் தலைமை ஏற்று நடாத்தினார்.

இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடமாகாணப் பணிப்பாளர் திரு.என்.பேராணந்தம் அவர்கள் பிரதம விருந்தினராகவும், வவுனியா மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவி பணிப்பாளர் திருமதி.ஸ்ரீகாந்தரூபன் விமலேஸ்வரி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், இளைஞர்சேவைகள் மன்றத்தின் பொருப்பதிகாரி. திரு.ஐ.சுகானி அவர்களும், வடமாகாணக் காரியாலயக் காணக்காளர் அவர்களும் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து கொள்ள, ஏனைய அலுவலக உத்தியோகத்தர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் கலந்து கலந்து சிறப்பிக்க கலைநிகழ்வுகளுடன் விழா இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்து, இசுலாமிய, சிங்கள, கிறித்துவ மதங்களைச் சார்ந்த மாணவர்கள் பெருமளவில் பங்குபற்றி சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

அந்நிகழ்வின் நிழற்படத் தொகுப்புக்களை இங்கே பாருங்கள்.

கருத்துகள் இல்லை: