Exam

புதன், 22 அக்டோபர், 2008

எழில்மிகு வவுனியா..

வவுனியாவில் நிறைய எழில் மிகு இடங்கள் இருக்கின்றன. ஆனால்... தற்போதைய சூழலில் அவற்றினை நிழற்படம் எடுக்கும் நிலையில் வவுனியா இல்லையே... எனவே என்னால் இயன்ற எனது பிராந்தியத்திற்குள் உள்ள சில கிராமப்புறங்களையும் ஆலயங்களையும் நிழற்படம் எடுத்துள்ளேன். இப்பொழுது தான் ஒரு நல்ல நிழற்பட கருவி ஒன்றை வாங்கியுள்ளேன். இனி தொடரும் என் புகைப்பட பணி...இது ஒன்றும் தடுப்பு காவலரன் அல்ல. கிணறு வெட்டிய மண்குவியல் தான் என்ன தான் யுத்தம் நடைபெற்றாலும் வீடு கட்டுபவர்கள் கட்டிக் கொண்டு தான் இருக்கின்றார்கள்.

வவுனியா கோவில்குளம் சிவன் கோவில் முன்பு சிரமதானப்பணிக்கு வந்த புதுக்குளம் மகாவித்தியாலய சாரணர்கள்.

வவுனியா சமளன்குளத்தில் அமைந்துள்ள கல்லுமலைப்பிள்ளையார் கோவில் (நான் பிறந்த இடம் என்ற பெருமை எனக்குண்டு அது மட்டுமல்ல எனது தந்தையாரால் உருவாக்கப்பட்ட ஆலயங்களுள் இதுவும் ஒன்று)
இன்று தொல்பொருள் ஆராய்ச்சித் தினைக்களத்தின் வசம் உள்ளது.



அப்பாடா நிழற்படம் எடுத்து களைச்சிப் போயிட்டன் கொஞ்சம் பொறுங்க... ஓய்வெடுத்திட்டு வாரன்... (என்னதான் elephant house, Gar gills Ice creamங்கள் இருந்தாலும் இந்த சைக்கிள்காரர் விற்கிற 15 ரூபா Ice பழத்திற்கு நிகராகுமா?)

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் அமைந்துள்ள எழில் மிகு சிறு குன்றில் வீற்றிருக்கும் முருகன் ஆலயத்தின் தோற்றம் இது. இந்த ஆலயம் பற்றி வவுனியா வாழ் மக்கள் பலருக்கே தெரியாது. தற்போது பிரபல்யமாகி வரும் ஒன்று. எங்கே இயற்கை சூழலையும் இதன் அமைதியையும் கெடுத்து விடுவார்களோ என்ற அச்சம் எனக்குண்டு. இதற்கு அருகில் கல்வாரி மலை அமைந்துள்ளது. அடுத்த பதிவுகளில் அதன் எழில்மிகு தோற்றத்தை வெளியிடுகின்றேன்.
எனது கணினி நிறுவனத்தின் பின் பகுதியில் அமைந்துள்ள பகுதி இதுவாகும். இது சிவன் ஆலயத்தின் பராமரிப்பில் உள்ளது. காடு மன்றிக் கிடந்த இந்த இடம் இப்பொழுது அறங்காவலர்களின் அயராத உழைப்பில் நெல் விளையும் விளை நிலமாகமாற்றப்பட்டு வருகின்றது.
சமளங்குளத்தின் அணைக்கட்டின் ஓர் தோற்றம்.
சமளங்குளத்தின் குளத்தின் உள்ளே ஓர் மரத்தில் அந்திப் பொழுதில் நாரைகளும் கொக்குகளும் அடைக்கலம் ஆகும் காட்சி... (வெளிநாட்டு சில பறவை இனங்களும் அடக்கம்). நல்ல நிலையில் நாம் இதை பராமரித்தால் இதுவும் ஓர் வேடந்தாங்கல் தான். பார்ப்போம் காலப்போக்கில் மாற்றங்கள் வரலாம்.....

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி -

த.அகிலன் சொன்னது…

//(என்னதான் elephant house, Gar gills Ice creamங்கள் இருந்தாலும் இந்த சைக்கிள்காரர் விற்கிற 15 ரூபா Ice பழத்திற்கு நிகராகுமா?)//

என்னது பதினஞ்சு ரூபாயா 5 ரூபாதானே வித்திச்சு

S.Lankeswaran சொன்னது…

அது ஒரு காலம்... இன்று உப்பு கூட ஒரு கிலோ ரூபா 60ஆம்.

Thusanthan சொன்னது…

நான் பிறந்த மண்ணின் எழிழ்மிகு இடங்களை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே... இது ஒரு புறமிருக்க உங்களுடய இந்த முயற்சிக்கு இதயம்கனிந்த வாழ்த்துக்கள்.. vavuniyatamil.blogspot.com/ மிகப்பெரிய இணையமாக உருவெடுக்க வேண்டும்...